
விடிந்ததும் பல் துலக்கல்
கடமையாகிறது,
தேநீர் கோப்பையோடு
நரசமானச் செய்திகள்,
அடுக்களைத் தேவைகளின்
திட்டமிடலில்
மண்டைக் காய்ச்சல்,
என்னதான் குளித்து
சிகையொதுக்கி
நறுமணத்தோடு
அலுவலுக்குச் சென்றாலும்
வதங்கிய வெண்டைக்காயாய்தான்
வாசலில்
மறுபடியும் வந்து நிற்கிறேன்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment