
வான்வெளி நீள்பரப்பில் வட்டமிடும்
கழுகனின் பார்வையில்
சுற்றிவரும் இரைகளெல்லாம்
உள் வாங்கும் மனவெளியில் ,
தேவைக்கென்ற நிர்ணய உயிரொன்றை
தட்டிக் கவ்வும் அவ்வேளையில்
கொக்கிற்கு வைத்த குறியொன்று
தப்பியே கழுகன் நெஞ்சிற்கும் பாயும்
இடறலின் விதியில் , தப்பிதான் பிழைக்கும்
சாவிற்கருகில் சென்றுவந்த இரை !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment