Friday, 25 August 2017

காட்சி மாற்றம்



காலங்கள் மாறும் போது
காட்சிகளும்,
மாறத்தான் செய்கின்றன!
           முன்பிருந்த 
           நிலைமை யெல்லாம்
           முதுகில் ஏறிக் கொள்ளும்!
சற்றே இளைத்து போனால்,
நரி கூட, சிங்கத்தைக் கேட்கும்
"செளக்கியமா?" என்று
             காளான் கூட
             கர்வித்துக் கொள்ளும்
             புல்லுக்கு, குடை பிடிப்பதாக!
    எல்லாம்,
சற்று, சிலிர்த்தெழும் வரை!
மழை, குளிர்த்து விழும் வரை!
              காலங்கள் மாறும் போது
              காட்சிகளும்
              மாறத்தான் செய்கின்றன!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts