Wednesday, 9 August 2017

சிக்கிக் கொண்டவன்

Image may contain: one or more people

கார்ப்ரேட் சந்தைகளில் சிக்கிக் கொண்டு 
மீளத் தெரியாமல் விழிக்கின்றவன் 
வேப்பங்குச்சிகளை 
விலைக்கு வாங்குகின்றான் ,

துவைத்துப் போட்டத் தூமைத் துணிகள் 
மக்கும் சூழலில் , 
மக்காமல் விற்கப் படுகின்றது நாப்கின்கள் , 

வாழை இலைகளைத் தொலைத்தவன் , 
நெகிழிக் கழிவுகளைச் 
சூட்டோடு சாப்பிடுகிறான்,

வேது பிடிப்பை மறந்து போனவன் , 
மருத்துவ மனைகளில் காத்துக் கிடக்கின்றான் ,
உடல் களைப்பின் கசாயம்
உவ்வ்வே ஆகி விட்டது ,

சுத்திகரித்த எண்ணெய்களில் 
சுத்த கொழுப்பைத் தொலைத்தவன், 
கடலை எண்ணெய்களை 
கார்ப்ரேட் சந்தைகளில் தேடுகின்றான் ,

ஆனாலும், வாங்கும் விலைகளில்தான் 
அவைகளில்லை ...

நோய் நாடி, நோய் முதல் நாடி மறந்தவன், 
நோய் தேடி நோய் முதல் தேடி அலைகின்றான் ,
இன்னமும் சில காலங்களில் 
சுவாசத்தை விலைக்கு வாங்குவான்,
ஏழைகள் அப்போது இருக்கவே மாட்டார்கள்.

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts