பசி

பார்த்த இடமெல்லாம்
விளைந்திருந்தது பசி,
ஏழ்மையின் தயவால்
வயிற்றுப் பசி,
உழைத்த வேலைக்கும்
ஊதியம் கிடைக்காமல்
வறுமையின் பசியினால்
வாடினர் சில பேர்,
வயிற்று பசி
தொலைத்தவனையும்,
ஆசைப் பசி
அகோரமாய் ஆட்கொண்டது,
முற்றும் துறந்த
முனிவனைக் கூட
சற்றே ஆட்டி வைத்தது
காமப் பசி,
அறுக்க, அறுக்க
விதைகளே யில்லாமல்
விளைந்து கொண்டிருந்தது
பூமியில் அனேக பசிகள்!
- மு.முகமது பாட்சா

பார்த்த இடமெல்லாம்
விளைந்திருந்தது பசி,
ஏழ்மையின் தயவால்
வயிற்றுப் பசி,
உழைத்த வேலைக்கும்
ஊதியம் கிடைக்காமல்
வறுமையின் பசியினால்
வாடினர் சில பேர்,
வயிற்று பசி
தொலைத்தவனையும்,
ஆசைப் பசி
அகோரமாய் ஆட்கொண்டது,
முற்றும் துறந்த
முனிவனைக் கூட
சற்றே ஆட்டி வைத்தது
காமப் பசி,
அறுக்க, அறுக்க
விதைகளே யில்லாமல்
விளைந்து கொண்டிருந்தது
பூமியில் அனேக பசிகள்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment