Friday, 25 August 2017

அவள் பெயர் சீதையென்றும்

Image may contain: 1 person, closeup

ஆபனிகன் வலைக்குள் 
அகப்பட்ட மானொன்று 
மாயையின் வித்தைகளால் 
மாரீசனாய் உருமாறி 
மருட்கையுணர்த்தி 
வெருண்டொடும் வேளையில் 
மயங்கும் விழியாளொருத்தி 
விரித்த வலைக்குள் 
வீழ்ந்தும் மீளாத்துயரில் 
தப்பும் வழியறிந்தும் தப்பாது 
சிறையிருக்கும் நோவினைக்கு 
முத்த மருந்திட வருவாளா 
என்றே காத்திருக்கும் 
நொடிப்பொழுதில் 
மொத்த மழையாய்த் தந்த 
கன்னிகைக்கு, 
உறவென்றே வந்த ஒருவன் 
உதறி வீசிய வாள் வீச்சில் 
வீழ்ந்த ஈர் உடல்களில் 
வழிந்த உதிரத்துளிகளில் 
எழுதுகோல் கொண்டொருவன் 
வாழ்க்கைப் பிழையென்று 
எழுதிவிட்டு நகர 
சாதிய நரிகளெல்லாம் 
மான் கறி விருந்தில் 
மகிழாட்டம் ஆடும் அவ்வேளையில்.... 

தூரத்தில் நின்று 
கண்ணீர் வடிக்கும் அவளின் பெயர் 
சீதையென்றும் கூட இருக்கலாம்.

- மு.முகமது பாட்சா 

No comments:

Post a Comment

Popular Posts