
ஆபனிகன் வலைக்குள்
அகப்பட்ட மானொன்று
மாயையின் வித்தைகளால்
மாரீசனாய் உருமாறி
மருட்கையுணர்த்தி
வெருண்டொடும் வேளையில்
மயங்கும் விழியாளொருத்தி
விரித்த வலைக்குள்
வீழ்ந்தும் மீளாத்துயரில்
தப்பும் வழியறிந்தும் தப்பாது
சிறையிருக்கும் நோவினைக்கு
முத்த மருந்திட வருவாளா
என்றே காத்திருக்கும்
நொடிப்பொழுதில்
மொத்த மழையாய்த் தந்த
கன்னிகைக்கு,
உறவென்றே வந்த ஒருவன்
உதறி வீசிய வாள் வீச்சில்
வீழ்ந்த ஈர் உடல்களில்
வழிந்த உதிரத்துளிகளில்
எழுதுகோல் கொண்டொருவன்
வாழ்க்கைப் பிழையென்று
எழுதிவிட்டு நகர
சாதிய நரிகளெல்லாம்
மான் கறி விருந்தில்
மகிழாட்டம் ஆடும் அவ்வேளையில்....
தூரத்தில் நின்று
கண்ணீர் வடிக்கும் அவளின் பெயர்
சீதையென்றும் கூட இருக்கலாம்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment