Thursday, 3 August 2017

நான் இரசித்த கவிதைகள் - 17

அன்பின் பதட்டம்



நாற்பது வயதில் நீ நுழையும் போது, 
உன் 
ஓப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன 
சட்டையைத் தொளதொள வென்றோ 
இறுக்கமாகவோ போடுகிறாய் 
தலைமுடியை நீளமாகவோ 
குறுகவோ தரிக்கிறாய்
உன்னிடமிருந்து பறந்து சென்ற 
இருபது வயது என்னும் மயில் 
உன் 
மகளின் தோள் மீது 
தோகை விரித்தாடுவதை 
தொலைவிலிருந்து பார்க்கிறாய் 
காலியான கிளைகளில் 
மெல்ல நிரம்புகின்றன, 
அஸ்தமனங்கள், 
சூரியோதயங்கள் மற்றும் 
அன்பின் பதட்டம்
.
கவிஞர் தேவதச்சன்

No comments:

Post a Comment

Popular Posts