Wednesday, 23 August 2017

நான் இரசித்த கவிதைகள் - 49


ஒளிக்கு ஒர் இரவு

Image may contain: 1 person, sunglasses and closeup

காக்கை கரைகிறதே 
பொய்ப்புலம்பல் அது. 
கடலலைகள் தாவிக் குதித்தல் 
போலிக் கும்மாளம். 
இரும்பு மெஷின் ஒலி 
கபாலம் அதிரும். 
பஞ்சாலைக் கரித்தூள் மழை 
நுரையீரல் கமறும். 
அலமறும் சங்கு இங்கே 
உயிர்ப்புலம்பல். 
தொழிலின் 
வருவாய்தான் கும்மாளம். 
லாப மீன் திரியும் 
பட்டணப் பெருங்கடல். 
தாவிக் குதிக்கும் 
காரியப் படகுகள். 
இயற்கைக்கு ஓய்வு ஓயாத 
மகத் சலித்த அதன் 
பேரிரவு.
.
பிரமிள்

No comments:

Post a Comment

Popular Posts