Wednesday, 23 August 2017

இரண்டும் வெவ்வேறு கவிதைகளல்ல

Image may contain: 1 person, closeup

இளவரசியைக் கடத்திச் சென்றவனை 
தேடிச் செல்கிறான் விறகுவெட்டி , 
மாயக் கம்பளத்தில் கடத்திப் போனதாக 
கழுகொன்றுச் சொல்லிவிட்டுப் பறக்கிறது , 
இறகுகளை வரைந்து கொண்டு 
எளிதாகப் பறக்கிறான் விறகு வெட்டி , 
கடத்திப் போனவன் சூன்யக் காரனென்று 
எதிரில் வந்த நாகமொன்றுச் சொல்லிவிட்டு மறைகிறது , 
ஏழு கடல்கள் தாண்டியும் 
எளிதில் கிடைக்காத இளவரசியை 
மரத்தை வெட்டி உருவாக்கி ,உயிரை கொடுக்கிறான் , 
மன்னருக்கு மகள் கிடைத்த மகிழ்ச்சியில் 
ஏழைகளுக்கு இலவச நல் விருந்து , 
வரிசையில் பசியோடு காத்திருக்கிறாள் 
உண்மையான இளவரசி ! 
அன்னதானம் வழங்குவது மரவெட்டியும், மர இளவரசியும்! 

அன்னிய நாட்டிலிருந்து 
இறக்குமதி 
அரிசியும் பருப்பும், 
கான்கிரிட் பயிர்கள் 
வரிசையில் காத்துக் கிடக்கின்றன. 

இரண்டும் வெவ்வேறு கவிதைகளல்ல ; 
எங்கோ ஒரு முடிச்சி 
இழுத்துப் பிடிக்கிறது இரண்டையும் ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts