Thursday, 17 August 2017

அழகிய சிற்பம்

Image may contain: 1 person

மூத்தோர் சொன்ன
வார்த்தை களெல்லாம்
முகவுரையா?-இல்லை
முடிவுரையா?

கனவுக்குள் வாழும்
மனிதா! - நீ
கரையினிலா? - இல்லை
கடலினிலா?

முடங்கிப் போன
நெஞ்சுக்குள்ளே
முகமிழந்தன முகவரிகள்

தடங்கல் கண்டு
நின்றுப் போனால்
சகுனம் தானே
தடைக் கற்கள்


சுட்டுகின்ற 
குறைகளுக்குள்
தன் குறையை மறைக்கின்றாய்,

உன்னையே நீ செதுக்கு
நீயுமோர்
அழகிய சிற்பம்தான்.

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts