Thursday, 3 August 2017

நான் இரசித்த கவிதைகள் - 14


பருத்திக் காய்கள் வெடிக்கும் நாள்

Image may contain: 1 person, closeup and outdoor


பழுத்த பருத்தி இலைகள்
மட மடத்து உதிர்கின்றன
உலர்ந்த சருகுகளின் குவியல்
காற்றின் ஞாபகங்களில்
விலகி விலகி அசைகின்றது

வெடித்த பருத்திக் காய்களிலிருந்து
பிரிந்த பஞ்சுகள்
வேனிற்காலப் பொழுதொன்றைத் தூக்கிப்பறக்கின்றன

பச்சை இலைகளின் மணம்
இயற்கையை நடனமாடும்
பரவசத்தின் குரலென சிணுக்கமிடும்

தீப்பொறிகளென உதிர்ந்திடும் இலைகள்
காற்றைத் தீண்டும் பொழுது
மறுபடியும் குருத்துவிடும் உதடுகள்

அதிகாலைக் குளிரின் காமம்
மரத்தினில் இன்னும் தங்கியிருக்கிறதா
பருத்தி இலைகளில் தன்னை வழியவிட்டு
துடிக்கின்றது சூரியன்

ஒளிச் சேர்க்கையின் நிறப்பிரிகை
மூன்று காலங்களிலும்
தங்கிவிடுகின்றது

பருத்திக் காய்கள் வெடிக்கும் நாளொன்றில்
கண்களில் காடென வளரும்
பசிகொண்டவளுக்காக
விரைந்து வித்துக்களை உதிர்க்கின்ற
பஞ்சுகள்
காற்று வெளியெல்லாம் பரப்புகின்றன
அவன் வருகையின்
விநோதமான சமிக்ஞைகளை

கவிதாயினி அனார் இஸ்ஸத் ரெஹானா

No comments:

Post a Comment

Popular Posts