
சஞ்சீவினித் தேடியலுத்த அனுமன்
மகேந்திரகிரியில் பெயர்த்தெடுத்த
சஞ்சீவி மலையை
ஶ்ரீலங்கையில் நிறுத்திப்
பறித்த மூலிகையில் உயிர்த்த இலக்குவன்
பின்னர் எப்படிதான் மரித்தானோ ?
அமேசான் காடுகளில்தான் வளர்கிறதாம்
முடிகளுக்கான மூலிகைகள் !
இரு நாலிலக்க எண்களில்
தொலைகாட்சிகள்
வழுக்கைத் தலைகளைத் தடவுகின்றன !
அரசாங்கமே தேடுகின்றதாம் சஞ்சீவினி...!
சாதியக் கொலைகளுக்கு
மாற்றாக இருக்க இம் மருந்திற்கு
சற்றும் வாய்ப்பே யில்லை !
சாகா மருந்தாகவும் இருக்க
நிச்சயம் சாத்தியமில்லை !
வெட்டாத கிணற்றைத் தேடும்
தலையாரிக் கணக்காய்
வற்றாதுத் தொடரும்
இம் மூலிகையின் தேடல்கள் !
வைப்பாட்டியின் வயல்களில்
நீர்ப் பாய்ச்ச;
கிணறு வெட்ட, களையெடுக்க
கணக்கில் சேரலாம்
கணக்காய்ச் சில தேடல்கள் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment